தேடல் – நாம் மட்டும் தானா இந்த அண்டத்தில் – பாகம் 2

இந்த பாகத்துல நான் சொல்ல போற விஷயங்கள் நம்ப முடியாத வகையில இருக்கலாம். இதுல நான் ஆதாரம்ன்னு சொல்ற விஷயங்கள், வேற்றுகிரகத்தினர் உண்டு என்று நம்புபவர்களால் மட்டுமே (சில நடுநிலையாளர்கள் சேர்த்து) ஏற்று கொள்ளபட்ட விஷயங்கள். இவற்றை நானும் நம்புறதால தான் நான் இங்க ஆதாரம்ன்னு சொல்றேன். உங்களுக்கு நம்பிக்கை இல்லைனா அப்படியே விட்டிருங்க (இது சும்மா ஒரு நாவலோட பகுதின்னு நினைச்சிக வேண்டியதுதான்)

1. எகிப்தின் பிரமிடுகள் யாருடைய சூத்திரம்?

எகிப்தின் அடையாளமாகவே மாறிவிட்ட “பெரும் பிரமிடு” 2.5 மில்லியன் சுண்ணாம்பு கற்களால் கட்டபட்டது. இதன் கட்டமைப்பு கிட்டதட்ட மிகத்துல்லியமாக(ஒரு கொணத்திற்கும்[டிகிரி] குறைவாக) வட துருவத்தின் நேர்கோட்டில் உள்ளது. (உங்கள் நினைவிற்கு, வடதுருவம் காந்தசக்தியின் திசை). எந்த ஒரு தொழில் நுட்பமும் இல்லாத காலத்தில், எதேச்சையாக இது நடந்திருக்குமா?

இன்றைய விஞ்ஞானிகள் வட துருவத்தை துருவ நட்சத்திரம் மூலமாக அறிந்து கொள்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி பண்டைய எகிப்ப்தியர்களின் காலத்தில் துருவ நட்சத்திரம் அவர்கள் கண்களுக்கு புலப்பட்டிருக்காது. (But astronomers know that the Earth regularly wobbles very slowly on its axis over a period of 26,000 years and so in ancient Egyptian times there would have been no star overhead marking true north. – http://www.world-mysteries.com/)

மொட்டை பாலைவனத்துல, செதுக்கினாமாதிரி சதுர வடிவுல கற்கள். ஒவ்வொரு கல்லும் 2 டன் எடை உள்ளது. இப்படி 2.5 மில்லியன் கற்களை கொண்டு எவ்வளவு வருஷம் வேலை பாத்து, ஒரு சிறு பிழைகூட இல்லாம எப்படி கட்டியிருக்கமுடியும்?


பிரமிடுகள் 4500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஸ்பிங்க்ஸ் எனப்படும் அந்த மனித தலையும் சிங்க உடலும் கொண்ட சிற்பம் 12,000 ஆண்டுகள் பழமையானது. இரண்டும் வேற வேற தானே, வெவ்வேறு கால கட்டங்கள்ல கட்டபட்டிருக்கும்ன்னு நாம சொல்லலாம். ஆனா இந்த ஸ்பிங்க்ஸோட காரணம் பிரமிடுகளை பாதுகாக்கன்னு சொல்றாங்களே. இல்லாத பிரமிடை பாதுகாக்கவா 12,000 வருஷங்களுக்கு முன்னாடி இதை கட்டி இருப்பாங்க.
சரிங்க வயசை விடுங்க.. எகிப்தியர்கள் நமக்கு என்ன ஆதரங்களை விட்டுட்டு போயிருக்காங்க?

இது எகிப்து சிற்பங்களில் ஒண்ணு.. என்ன என்ன தெரியுது நீங்களே பாருங்க.

ஹெலிகாப்டர்?
பறக்கும் தட்டு?
பண்டைய அட்லாண்டிஸ்க்கு வேற்று கிரகவாசிகள் வந்ததாகவும். அவர்களோட தொழிநுட்பத்தை அட்லாண்டிஸ்ல இருந்தவங்களுக்கு கத்து கொடுத்ததாகவும் சொல்லப்படுது. அட்லாண்டிஸ் அழிஞ்ச போது அங்க இருந்த சில எகிப்து வந்ததாகவும், அவங்க மூலமா எகிப்ப்தியர்கள் பல நுட்பங்களை தெரிஞ்சிகிட்டதாகவும் சொல்லப்படுது.
இந்த ஓவியம் கூட பிரமிடுல இருந்து தாங்க எடுத்தது

ஆக.. எந்தவிதமான அறிவியல் முன்னேற்றம் இல்லா காலம்ன்னு சொல்லப்படுற காலத்துல, எகித்தியர்கள் மட்டும் ஏன் இவ்வளவு அறிவாளியா இருந்திருக்காங்க? எப்படி ஒரு மர்மமான கட்டிட கலை அவங்களுக்கு தெரிஞ்சுது? எப்படி செத்துபோன உடல் கெட்டுப்போகாம இருக்கிறதுக்கான ரசாயனம் கைகூடிச்சு? டியூட்காமென்ங்கிற இளவரசனோட சவப்பெட்டி தான் முதன் முதலா முழுசா கிடைச்சுது. அதை திறந்தவங்க எல்லாரும் மர்மமான முறையில இறந்து போனாங்க. அவனோட கல்லறைல இந்த பூமிக்கு சொந்தமேயில்லாத(எங்குமே காணக்கிடைக்காத) பூஞ்சைகாலன் எப்படி வந்தது?

உலகத்துல எகிப்துல மட்டும் பிரமிடுகள் இல்லை. உலகத்தோட பல பகுதிகள்ல பிரமிடுகள் இருக்கு. பண்டைய காலத்துல எகிப்தியர்கள் போல / எகிப்தியர்களை விட அறிவான கலாச்சாரம் ஒண்ணு இருந்தது. அது பத்தி அடுத்த பாகத்துல எழுதுறேன்.

3 thoughts on “தேடல் – நாம் மட்டும் தானா இந்த அண்டத்தில் – பாகம் 2

  1. எகிப்தின் பிரமிடுகள் பற்றிய உண்மை செய்திகள் நல்லா இருக்கு.இதற்கான விடையை தெரிந்து கொள்ள ஆவல்.

  2. பிரமிடுகள் சம்பந்தமான தொடரை ஏன் தொடரவில்லை .?பிரமிப்பாக இருந்தது அது .

  3. Good dispatch and this post helped me alot in my college assignement. Thank you seeking your information.

Leave a comment