நிஜத்தில் நீ என்னோடு இல்லை எனினும்
கனவுகளில் உன்னோடு கைகோர்கிறேன்.
ஜன்னல் வழி வீசிய குளிர்காற்றோடு
நம் காதலின் ஜனனம் மற்றொரு முறை நிகழ்கிறது.
வீசிய குளிர்காற்று என் எலும்புகளை ஊடுருவும் போது
உன் நினைவுகள் என் நெஞ்சில் ஊற்றெடுக்கிறது.
ஊசி மழைத்துளி என் உடலை நனைக்கிற போது
ஊசி முனையாகி நீ என் மனதை துளைக்கிறாய்.
கோடை வெயில் என்னை கொளுத்தும் போது
ஊழித் தீயாக நீ என் நிஜங்களை சுட்டெரிக்கிறாய்.
சூரிய ஒளியில் என் கண்கள் கூசாவிட்டாலும்
உன் விழியொளியால் என் கண்ணிமைகள் மூடுகின்றன.
ஆற்று நீரில் என் கால்கள் சறுக்காவிட்டாலும்
உன் விழிநீரால் என் நினைவுகள் நழுவுகின்றன.
கடலலைகளின் ஆர்பரிக்கும் சத்தம் என் காதில் விழுந்தாலும்
உன் விசும்பல் மட்டும் கேட்டு என் உயிரை கதறுகின்றது.
உன் மூச்சு உன் நாசிகளில் உலவுவதை நிறுத்தியதால்
என் மூச்சு என்னை இதயத்தை எரிக்க ஆரம்பித்தது.
உன் உயிர் உன்னை பிரிந்த போது
நான் உயிரற்றவனாக உணர்ந்தேன்.
உன் உடல் தீயில் கருகிய போது
நம் எதிர்காலம் அதில் சாம்பலாகியது.
நீ இவ்வுலகை விட்டு விலகியபோது
நான் என்னை விட்டு விலக ஆரம்பித்தேன்.
உன் ஜீவ ஒளியோடு உலவிய என்னை
காரிருள் நரகத்தில் தள்ளிவிட்டு
இறையொளியோடு நீ மட்டும் கலந்து விட்டாய்.
நீ இன்று என்னோடு இல்லை எனினும்
என் நெஞ்சில் பதிந்துவிட்ட உன் நினைவுகளில்
மட்டும் தான் நான் உன்னை காண்கிறேன்.
என்னில் மிச்சமிருப்பது இவ்வுடல் தான்
காற்றில் கலந்திருக்கும் உன்…
View original post 36 more words