மரணத்தின் வாசலில்
பூத்துச் சிரிக்கும் பூ நான்.
மழைப் போர்வை போர்த்தி
குளிர்காயும் குயில் நான்.
எரிக்கும் சூரியனின் கீழ்
நிழல் தேடும் மேகம் நான்.
மண்ணில் புதைந்து கொண்டு
முளைக்கத் துடிக்கும் விதை நான்.
சுழற்காற்றிலும் சுதந்திரமாய்
சுற்றித் திரியும் பாட்டம்பூச்சி நான்.
பாறையையும் பிளந்து
நீரருந்தும் மரவேர் நான்.
சாம்பலையும் உயிராக்கி
மீண்டும் பிறக்கும் பீனிக்ஸ் நான்.
என்னை சிதைத்து என்னையே
உருவாக்கும் சிற்பி நான்.
நான் அடங்காதவன் தான்….
நண்பா நீ அடங்காதவந்தான் தெரியும்.ரொம்ப நாளாக விடச்சொல்லியும் விடாப்பிடியாக கொண்டிருக்கும் ஒரு பழக்கத்திலும் நீ அடங்காதவந்தான்.
எதிலும் அடங்காதவன் தாண்டா சிவா , ரூபன்